உளுந்தூர்பேட்டை பகுதியில் பரவலாக மழை

உளுந்தூர்பேட்டை, டிச. 6: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் எலவனாசூர்கோட்டை, களமருதூர், வண்டிப்பாளையம், கெடிலம், எறையூர், வெள்ளையூர், குமாரமங்கலம், பாதூர், சிறுத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வந்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மானாவாரியாக உளுந்து பயிரிட்ட விவசாயிகளும், சம்பா சாகுபடியாக நெல் பயிரிட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: