காரைக்கால், டிச.5: காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வரும் வணிக வளாக கட்டுமானப்பணியை தொகுதி எம்எல்ஏ கீதா ஆனந்தன் ஆய்வு செய்தார். காரைக்கால் திருமலைராயன்பட்டின கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்ததால், அதனை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி வணிகர்கள், தொகுதி எம்எல்ஏ கீதாஆனந்தனிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், எம்எல்ஏ கீதா ஆனந்தன் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணனிடம் பேசி ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியில், பழைய காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிய வணிக வளாகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.