கழுகுமலை, டிச. 4: கழுகுமலை அருகே குமராபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அனைத்துக்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் குமராபுரம் விலக்கு உள்ளது. இந்த விலக்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் அரசு டாஸ்மாக் கடை அமைக்க உள்ள நிலையில் அதற்கு அனைத்து கட்சியினரும், குமராபுரம் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டரிடமும் மனு அளித்தனர். மனு விவரம்: குமராபுரம் ஊர் விலக்கில் இருந்து 1 கி.மீ. தூரம் உள்ளது. இரவு நேரத்தில் வெளியூர்களில் இருந்து இங்கு வரும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருபவர்கள், பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி ஊருக்குள் செல்ல நடந்துதான் செல்ல வேண்டும்.