மணப்பாறை, நவ.29: மணப்பாறை பேருந்து நிலையத்தில் பஸ்சில் ஏற முயன்ற மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்தவர் முருகாயி (65). இவர் நேற்று மணப்பாறை சந்தைக்கு வந்து விட்டு வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக மணப்பாறை பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பேருந்தில் மூதாட்டி ஏற முயன்றபோது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதனால் மூதாட்டி கதறி அழுதார். தகவலறிந்து விரைந்து வந்த மணப்பாறை போலீசார் மூதாட்டியிடம் சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.