தேன்கனிக்கோட்டை, நவ.29: தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பால் குளிரூட்டும் நிலைய காசாளரிடம் ₹2.50 லட்சம் வழிபறி செய்த பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசூர் அக்ரஹாரம் கிராமத்தின் அருகே, தனியார் பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோட்டை அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பா மகன் வேணுகோபால் (35) என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 26ம் தேதி, பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து ₹2.50 லட்சம் பணத்துடன், தேன்கனிக்கோட்டையில் உள்ள வங்கியில் பணம் கட்ட டூவீலரில் சென்றார்.