சேலம், நவ.23: மேட்டூர்-ஆத்தூர் குடிநீர் திட்டத்தில் ஆத்தூர் பகுதியில் பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதள தலைவர் வேலாயுதம், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டூர்-ஆத்தூர் குடிநீர் திட்டத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அங்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். ஆத்தூரில் உள்ள அரசுபள்ளிகளில் குடிநீர், கழிப்பிட வசதி இல்லாத நிலையில் உள்ளது.