கழுகுமலை, நவ 23: கழுகுமலை நடுஊரணி சித்தி விநாயகர் கோயிலில் அன்னதானம் நடந்தது. கழுகுமலையில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு ஆறுமுக நகர் நடுஊரணி சித்தி விநாயகர் கோயிலில் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 5ம் ஆண்டாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் எம்பி தொகுதி பொறுப்பாளரும், திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளருமான சுப்பிரமணியன் தலைமை வகித்தார். காவல்துறை ஆய்வாளர் முத்துலட்சுமி, நடுவப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சுப்பையா பாண்டியன், வக்கீல் பாலமுருகன், சிவா, அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பு மாநில துணைச்செயலாளர் ரகு முன்னிலை வகித்தனர்.