சாத்தான்குளம், நவ. 22: சாத்தான்குளம் வீரஇடக்குடித் தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் மணிகண்டன்(40). இவரை அக். 30ம்தேதி இரவு 5பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. போலீஸ் விசாரணையில் தசரா விழா கணக்கு தொடர்பாக கொலை நடந்தது தெரியவந்தது. சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் தலைமையிலான போலீசார் கடந்த 2ம்தேதி வீரஇடக்குடித் தெருவைச் சேர்ந்த பாப்புலிங்கம் மகன் முத்து என்ற இசக்கிமுத்து, வேல்பாண்டி மகன் செல்லப்பா, மரியஜோசப் மகன் கிங்ஸ்டன் ஜெயசிங் ஆகியோரை கைது செய்தனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய மந்திரம் மகன் மணிகண்டன், மாணிக்கவாசகபுரம் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் சுதர்சன் வினோத் என்ற சாம் ஆகியோரை தேடி வந்தனர்.