விஷம் சாப்பிட்டு இளம்பெண் சாவு

திருவெண்ணெய்நல்லூர், நவ. 21:  திருவெண்ணெய்நல்லூர் அடுத்த வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி(32). இவருக்கும், திருவண்ணமலை மாவட்டம் நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாண்டு மகள் கவுதமி(28) என்பவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன் திருமணமாகி உதயா(2) என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கவுதமிக்கு சிறு வயதில் இருந்தே வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கவுதமிதாயார் சுலோச்சனா திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: