சீர்காழியில் திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

சீர்காழி, நவ.21: சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்ராயன், நிர்வாகிகள் பொன்முடி, வீரமணி, துரை, மோகன், குகன், ராஜசேகர், ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: