சாலையில் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

சங்கராபுரம், நவ. 20: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சியில் உள்ள 11வது வார்டில் பொய்குணம் செல்லும் சாலையில் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. இதுகுறித்து நாங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கழிவுநீர் தேக்கத்தால் டெங்கு மற்றும் மலேரியா, மர்மக்காய்ச்சல் பரவும் அபாய நிலையுள்ளது என்றனர். எனவே சங்கராபுரம் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை அமைக்க நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: