திருச்செங்கோடு, நவ.15: திருச்செங்கோடு அருகே, குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்செங்கோடு அருகே, கொன்னையார் ஆசிரியர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 18 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காமல் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டி உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் பல முறை முறையிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.