திருப்பூர், நவ.15: திருப்பூரில் டாக்டரை தாக்கி, நகையை பறித்துச்சென்ற வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது. திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பூமாவீரமகாலட்சுமி (52). பல் டாக்டர். கடந்தாண்டு, அனுப்பர்பாளையத்தில் உள்ள அவரது கிளினிக்கிற்கு, பல் வலிக்கு சிகிச்சை பெற வேண்டும் என ஒரு நபர் வந்தார். அப்போது அங்கு யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், அங்கிருந்த கூர்மையான கம்பியால், டாக்டரை குத்திவிட்டு, அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.