சத்தியமங்கலம், நவ. 15: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பண்ணாரி அம்மன் கோயில் விவரங்களை கேட்டவருக்கு நேரில் வருமாறு கோயில் நிர்வாகம் பதில் அனுப்பியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(45). இவர், பண்ணாரி அம்மன் கோயில் செயல் அலுவலருக்கு கோயில் குறித்த விபரங்கள் வேண்டி 7 வினா அடங்கிய மனுவினை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் தருமாறு கடந்த அக்டோபர் 5ம் தேதி மனு அனுப்பினார். இதில், இக்கோயில் எந்த ஆண்டு இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது, கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பெயர் விபரம், கோயிலுக்கென வாங்கப்பட்ட வாகன விவரம், 4 சக்கர வாகனத்திற்கு ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட கேள்விகள் மட்டுமே இதில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் கோயில் நிர்வாகத்திலிருந்து செல்வகுமாருக்கு தபால் வந்தது. இதை பார்த்த செல்வகுமார் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் இவர் கேட்ட எந்த கேள்விக்கும் அதில் பதில் தெரிவிக்கவில்லை.