திருப்பூர், நவ.15: தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி ஏற்படும் என தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
திருப்பூரில் தமாகா நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு வந்த அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனை வழங்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் உட்பட பல்வேறு வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அனைத்து கிராமங்களிலும் மருத்துவ குழுக்களை ஏற்படுத்தி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.