ஈரோடு, நவ. 15: ஈரோட்டில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் ஏழு பவுன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
ஈரோடு இடையன்காட்டு வலசு சின்னமுத்து 3வது வீதியை சேர்ந்த சுப்பிரமணி. இவர் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளி. இவரது மனைவி நீலா(45). இவர் நேற்று காலை வீரப்பன் சத்திரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு பாரதி தியேட்டர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இவரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த இரண்டு மர்மநபர்கள், நீலாவை தடுத்து நிறுத்தினர். அவர்கள் நீலாவிடம் தாங்கள் போலீஸ் எனவும், இந்த பகுதியில் பலரிடம் செயின் பறிப்பு சம்பங்கள் நடந்து வருகிறது எனவும். நீங்கள் கழுத்தில் செயின் அணிந்து செல்வது பாதுகாப்பு அல்ல என கூறியுள்ளனர்.