கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், நவ. 15: கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மற்றும் மாநில, மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் எத்திராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பால ஆனந்தஜோதி, அரிபாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொமுச மாவட்ட செயலாளர் பொன்முடி, ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் குளோப் உள்ளிட்டவர்கள் சிறப்புரையாற்றினர். இதில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு தங்கு தடையின்றி மாதத்தின் முதல் வாரத்தில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். அமைப்புசாரா நலவாரியத்தில் பணப்பயன்கள் உடனடியாக வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு மணல் தடையின்றி கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: