கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, நவ. 15:   தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி வட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தனலட்சுமி, துணை செயலாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்டம் மாறுதல் செய்ய வேண்டும். விஏஓக்களுக்கு இணையதளம் வசதி அரசு செய்து கொடுக்க வேண்டும். விஏஓக்கள் கூடுதல் கிராமங்கள் பொறுப்பு வகிக்கின்ற போது பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். விஏஓ அலுவலகத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். விஏஓக்களுக்கென தனித்துறையை உருவாக்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம நிர்வாக அலுவலர்கள் துரை, சம்பத், சலீம், கிருஷ்ணவேணி, வசந்தி, புவனா, வெங்கடேசன், சுப்ரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் ஞானபிரகாஷ் நன்றி கூறினார்.

Related Stories: