×

கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் தூய்மை காவலர்கள் சிரமம்

கீழக்கரை, நவ. 15: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சேதுகரை ஊராட்சியில் பணி செய்யும் தூய்மை காவலர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் சேதுகரை ஊராட்சியில் பணி செய்து வரும் தூய்மை காவலர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஒரு நபருக்கு நாளென்றுக்கு 205 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்துள்ளனர். இதை தற்போது ரூபாய் 80தாக குறைத்து வழங்கி வருவதாகவும், அதுவும் கடந்த முன்று மாதங்களாக வழங்கவில்லை என்று இப்பணி செய்யும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தூய்மை காவலர்கள் கூறுகையில், எங்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் நாளொன்றுக்கு ரூ.205 என்று ஒரு மாதத்திற்கான தொகை 6 ஆயிரத்து 150க்கு காசோலையாக வழங்கி வந்தனர். அதை தற்போது 6 மாதங்களாக மாதம் ரூபாய் 2 ஆயிரத்து 500 என குறைத்து மூன்று மாதங்கள் காசோலை வழங்கினர். பிறகு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.இதனால் நாங்கள் அன்றாடம் வீட்டு செலவிற்கு கூட சிரமப்பட்டு வருகிறோம். இதனால் பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே மாவட்ட கலெக்டர் எங்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பளத்தை உயர்த்தி மாதா, மாதம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை