×

மது பாட்டில் கடத்தியவர் கைது 48 பாட்டில் பறிமுதல்

திருப்புத்தூர், நவ. 15:திருப்புத்தூர் அருகே மது பாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே சிந்தக்காடு பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா (21). இவர் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதற்காக விராமதியிலுள்ள டாஸ்மாக் கடையில் 48 குவாட்டர் மது பாட்டில்களை நேற்று இரவு வாங்கி கொண்டு தனது சொந்த ஊருக்கு டூவீலரில் கடத்தி வந்தார். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த கீழச்சிவல்பட்டி எஸ்ஐ போஸ் தலைமையிலான போலீசார் அழகுராஜாவை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை