தீ விபத்தில் 2 வீடு நாசம் ₹4 லட்சம் சேதம்

உளுந்தூர்பேட்டை, நவ. 8:  உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு.மாம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில், சம்பவத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் லட்சுமணன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரது இரண்டு வீடுகள் தீப்

பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த துணி மற்றும் பொருட்கள் எரிந்தது. இது குறித்து உனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமை

யிலான தீயணைப்பு குழுவினர் சென்று சுமார்

1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும் இரண்டு வீட்டில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான துணி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பு.மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் அதிரடி கைது

திருக்கோவிலூர், நவ. 8: கண்டாச்சிபுரம் அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி(35). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில், இவரது மனைவியை கடந்த ஆறு மாதங்களாக அதே ஊரை சேர்ந்த பசுபதி மகன் பிரபு(36) என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம். இதனால் பழனிசாமி, வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பழனிசாமி மனைவிக்கு போன் மூலம் பிரபு ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு

செய்து வந்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில்  பிரபு மீது கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: