பெருந்துறை. நவ.2 : பெருந்துறை அருகே உள்ள மூணுவள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (28) இவருடைய தம்பி பிரபாகரன் (23). இவர்கள் இருவரும் தங்களுடைய ஊருக்கு செல்வதற்காக பெருந்துறை பஸ் நிலையம் அருகே நேற்று முன் தினம் இரவு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி பிரபாகரன் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் பெருந்துறை அடுத்த சீனாபுரம் கவுண்டம்பாளையம் பிரிவு அருகே பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம், மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பைக்கில் சந்தேகப்படும் வகையில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.