மேலூர், நவ.1: மேலூர் அருகே உள்ள மணப்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(35). வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வீட்டை விட்டு காரில் வெளியே கிளம்பினார். மேலூர் அரசு மருத்துவமனை அருகில் இவரை தடுத்து நிறுத்திய மர்ம நபர்கள் காருடன் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் மனைவி முத்துச்செல்வி மேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரில், தனது கணவர் ரூ.5 லட்சத்துடன் சென்றதாகவும், மர்ம நபர்கள் அவரை பணம் மற்றும் காருடன் கடத்தி சென்றுவிட்டதாகவும், தனது கணவர் செல்போனில் இருந்து மேலும் பணம் கேட்டு தன்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.