தா.பேட்டை, அக்.30: தா.பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் தா.பேட்டை வட்டார வளமையத்தின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 3.11.2018 அன்று காலை 10 மணிமுதல் 1 மணிவரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. 18 வயது வரைஉள்ள மாற்றுத்தின் கொண்ட மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.