சீர்காழியில் அரசு அலுவலர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு

சீர்காழி, அக்.26: அரசு அலுவலர் ஒன்றியம், வட்டக்கிளை தேர்தல் பேரவைக்கூட்டம் சீர்காழியில் நடந்தது. தேர்தல் அலுவலரும், மாவட்டத் தலைவரும் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளருமான அமிர்தகுமார் தலைமை வகித்தார். என்ஜிஓ சங்க தலைவராக கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர்களாக கருணாகரன், ரவி, பாபுஜி, மாலதி, செயலாளராக தமிழ்வாணன் பொருளாளராக ரமேஷ், அமைப்புச் செயலாளராக சுப்பிரமணியன், பிரசார செயலாளராக செல்வநாயகம், இணைச்செயலாளர்களாக சவுந்தரராஜன், மணிகண்டபிரபு, இளைஞரணி செயலாளராக கலைவாணன், இலக்கிய அணி செயலாளராக செந்தில்நாதன், மகளிரணி செயலாளராக புஷ்பலதா தணிக்கையாளராக சதீஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: