சென்னை, அக். 26: வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் கவிதா (38), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 17 வயது மகள், கடந்த 15ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியில் கார் ஓட்டி வரும் தர்மலிங்கம் என்பவர் ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து, சிறுமி தனது தாய் கவிதாவிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த கவிதா சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.