மரக்காணம், அக். 23: மரக்காணம் பகுதியில் நாரவாக்கம், கோணவாயன்குப்பம், அனுமந்தை, கீழ்பேட்டை, கந்தாடு, நடுக்குப்பம், வண்டிப்பாளையம், புதுப்பாக்கம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் கிணறு, ஏரி, குளம் உள்ளிட்டவைகளில் இருக்கும் தண்ணீரை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர். ஆனால் இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் இருந்த அனைத்து நீர் நிலைகளும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே வறண்டுவிட்டது. இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தங்களது நிலங்களில் சாகுபடி செய்யாமல் இருந்தனர்.