×

முன்னாள் மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு உதவி

மண்டபம், அக்.18: மண்டபத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் பள்ளிக்கு மேற்கூரை அமைத்து கொடுத்தனர். மண்டபம் ஒன்றியம் மரைக்காயர்பட்டினத்தில் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மர நிழலில் அமர்த்து மதிய உணவு சாப்பிட்டு வந்தனர். மழைக்காலங்களில் அமர்ந்து சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்கள் முகமதுகான், கதிர் ஆகியோர் முயற்சியால் மலேசியாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ரூ.50 ஆயிரம் செலவில் பள்ளி முகப்பில் மேற்கூரை, தரைதளம் அமைத்து கொடுத்தார். இதனால் மாணவர்கள் தற்போது நிம்மதியாக சாப்பிட்டு வருகின்றனர். மேற்கூரை மற்றும் தரைத்தளம் அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார்.

Tags : Alumni ,government school ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...