×

போலீஸ் பணிக்கு கைவிரல் ரேகை பதிவு

சிவகங்கை, அக்.18: சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் கை விரல் ரேகை பதிவு நடந்தது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்போர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 19 பெண்கள், 91 ஆண்கள் உள்பட 110 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு நேற்று சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் கைவிரல் ரேகை பதிவு நடந்தது. தொடர்ந்து மருத்துவ தகுதியில் தேர்ச்சி பெற்றவுடன் பணி வழங்கப்பட உள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை