தேன்கனிக்கோட்டை, அக்.17: கெலமங்கலம் வேளாண் துறை சார்பில் பிதிரெட்டி கிராமத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில் பிதிரெட்டி கிராமத்தில் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய திட்டம் வேளாண் துணை இயக்குநர் பிரதீப்குமார்சிங் இயற்கை வேளாண்மை குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பேசினார். கெலமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை குறித்தும், பயன்கள் குறித்தும் எடுத்து கூறினார்.