கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற முதியவர் சாவு

ரிஷிவந்தியம், அக். 16:    ரிஷிவந்தியம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற முதியவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

 ரிஷிவந்தியம் அருகே மரூர் கிராமத்தை சேaர்ந்தவர் அண்ணாமலை (65). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள நிலத்தில் கரும்பு வெட்டிய சோலையை கொளுத்த சென்றார். அங்கு சோலையை கொளுத்திக் கொண்டிருந்தபோது, வேலு என்பவருக்கு சொந்தமான பக்கத்து நிலத்தில் வெட்டாமல் இருந்த கரும்பு தோட்டத்துக்கு தீ பரவியது. இதைக்கண்ட அண்ணாமலை அதை அணைக்க முற்படும்போது, தீயில் மாட்டிக்கொண்டார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.   இது

குறித்து அண்ணாமலை மகன் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: