அரசு பஸ் கார் மோதியதில் தம்பதி படுகாயம்

மானூர், அக். 11:  மானூர் அருகே அருகே அரசு பஸ்சும், காரும் ேமாதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். நெல்லை சந்திப்பில் இருந்து உக்கிரன்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டியை நோக்கி நேற்று மதியம் 2.30 மணியளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை வண்ணார்பேட்டையை சேர்ந்த டிரைவர் சிவசுப்பிரமணியன் (55) ஓட்டினார்.ராமையன்பட்டி கால்நடை மருத்துவக்கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் மீண்டும் புறப்படும்போது, ராஜபாளையத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த கார், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சின் மீது மோதியது.இதில் காரில் வந்த பாக்கியராஜ் (33), அவரது மனைவி கலைவாணி ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் இருந்த பாக்கியராஜின் இரு பெண் குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து மானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: