சென்டர் மீடியனில் கார் மோதி 3 பேர் படுகாயம்

திண்டிவனம், செப். 26:சென்னை டிநகர் பைரவி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (68).  இவர் நேற்று தனது மனைவி நிர்மலீஸ்வரி (61), மகள் ஷாலினி (29) ஆகியோருடன்காரில் திருச்சி நோக்கி சென்றார். காரை ஷாலினி ஓட்டினார். கார் திண்டிவனம் அடுத்த பாதிரி பிரிவு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது சாலையை மாடு ஒன்று கடந்துள்ளது. இதன் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.  

Related Stories: