வானூர், செப். 25: தமிழகத்தில் பதிவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து வரப்படுகிறது. ஆன்லைன் பத்திரப்பதிவை தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களுக்கு ஓடிபி எண் அனுப்பப்பட்டு பிறகு பதிவுக்கு ஏற்கப்பட்டது.
அதனையடுத்து டோக்கன் முறை கடந்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பதிவுக்கு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வந்துவிடவேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் பின்வரிசையில் இருப்பவர்கள் பதிவுக்கு வரவேண்டும் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உடல்நலம் சரியில்லாதவர்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு வருபவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு