செல்போன் டவரில் டீசல் திருடிய 2 பேர் மீது வழக்கு

திண்டிவனம், செப். 25:  மயிலம் அருகே தழுதாளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த டவரை பாதுகாக்கும் பணியில் கீழ்பெண்ணாத்தூரை சேர்ந்த குப்புசாமி மகன் விஜயராஜ் (47) என்பவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்கும் பணியில் விஜயராஜ் இருந்தார். அப்போது தழுதாளி  பகுதியில் இரண்டு நபர்கள் டீசலை திருடிக்கொண்டு தப்பி சென்றது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை துரத்தி பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் இருவரும் பாதிரிப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வில் விஜயன் என்பதும் உடந்தையாக   மணிகண்டன் என்பவர் இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து விஜயராஜ் மயிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: