சங்கராபுரத்தை சேர்ந்தவர்கள் கார் விபத்தில் 4 பேர் படுகாயம்

திண்டிவனம், செப். 25: சங்கராபுரத்தை சேர்ந்தவர் பாவா மகன் சர்ஜரின்(38). இவர் தனது மனைவி ராக்மா(35), மகள் அஜிலா(13), உறவினர் அன்வர் மனைவி நூர்ஜகான் ஆகிய நான்கு பேரும் சென்னைக்கு காரில் சென்றனர். கார் திண்டிவனம் அடுத்த தீவனூர் நான்கு முனை சந்திப்பு அருகே வந்தபோது மயிலம் பகுதியிலிருந்து வந்தவாசி நோக்கி சென்ற கார் இவர்கள் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில் சர்ஜரின் உட்பட அதில் வந்த நான்கு பேரும் காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் மதுரை முத்துசாமி நகரை சேர்ந்த முத்துபிரகாஷ் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: