சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், செப். 21: சங்க நிர்வாகிகள் அரசு செயலரை சந்திக்க அனுமதி அளிப்பதில் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் சுகவனம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதை கண்டிப்பது, சங்கத்தின் ஜனநாயக நடவடிக்கையை முடக்க முயல்வதை கண்டிப்பது, உச்ச

நீதிமன்ற தீர்ப்பின்படி வட்டார மேற்பார்வையாளர்கள் பொறுப்பில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினரை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் விழுப்புரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ரங்கராஜன், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: