திருவெண்ணெய்நல்லூர், செப். 21:திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அமாவாசைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் படையப்பா மகன் லட்சுமணன்(24). இவர் கடந்த 9ந்தேதி மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களை இழிவாக பேசி அதை வாட்ஸ் அப்பில், பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து, விசிக மாவட்ட அமைப்பாளரும், தி.எடையார் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் ரமேஷ்(36) லட்சுமணன் மீது கடந்த 9ம் தேதி திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்கு பதிந்து லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.