திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர் கைதுதிருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர் கைது

திருக்கோவிலூர், செப். 19:  திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ராஜ்குமார்(17). அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் மதிய உணவிற்காக வீட்டிற்கு செல்லும் போது ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த அதே ஊரைச் சேர்ந்த மோகன்(33) என்பவரது ஆட்டோவில் உள்ள கண்ணாடியில் முகம் பார்த்தது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு

முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ராஜ்குமாரை, மோகன் ஆபாசமாக திட்டி ஸ்பேனரால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் திருக்கோவிலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மோகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் ராஜ்குமாரின் உறவினர்கள் மோகன் ஆட்டோவை சேதப்படுத்தியும், அவரை ஆபாசமாக திட்டி தாக்கியும் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மோகனின் மனைவி மகேஸ்வரி(32) என்பவர் திருக்கோவிலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ராஜ்குமார் சகோதரர் அருண்(27), உறவினர்கள் சரவணன், ஏழுமலை, இளவரசன், முருகன், விஜி ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் அருணை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: