சேலம், செப்.18:அதிமுக ஊழல் ஆட்சியை அகற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அணி திரண்டு போராடுவோம் என அம்மாபேட்டை 38வது வார்டை சேர்ந்த ஜீவா (எ) சிவக்குமார் கூறியுள்ளார். அதிமுக அரசின் குட்கா ஊழலை கண்டித்து, சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே இன்று காலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக சேலம் அம்மாபேட்ைட பகுதி 38வது வார்டை சேர்ந்த ஜீவா (எ) எம்.என்.சிவக்குமார் கூறியதாவது:
ஓய்வறியா உழைப்பிற்கு சொந்தக்காரர் என கலைஞர் கருணாநிதியால் போற்றப்பட்ட தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியின் ஊழல், மக்கள் விரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து வருகிறார். அதிமுக அரசின் ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தை நாடி, வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த அதிமுக ஆட்சியை அகற்ற அவர் பின்னால், தமிழகமே திரண்டு நிற்கிறது.