×

பரமக்குடி மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி

பரமக்குடி, ஆக.15: வட்டார அளவிலான போட்டியில் அசத்திய கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். நயினார்கோவில் வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது. இதில்  நயினார்கோவில் வட்டாரத்தை சேர்ந்த 600 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் டென்னிகாய்ட், செஸ், எறிபந்து, கைப்பந்து, கேரம்,

கபடி ஆகியவற்றில் வெற்றிபெற்றனர். இவர்கள் இந்த மாத இறுதியில் நயினார்கோவிலில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.  போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா,  அன்வர்ராஜா ஆகியோரையும் பள்ளி தாளாளர் சாதிக்அலி, தலைமையாசிரியர் அஜ்மல்கான் ஆகியோர் பாராட்டினர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை