சத்தியமங்கலம்: தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய அணை என்ற சிறப்பு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் கடந்த 2 மாதங்களில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததை தொடர்ந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.