சிவகங்கை, ஆக. 14: சிவகங்கையில் அனைத்துக்கட்சி சார்பில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம், அஞ்சலி கூட்டம் நடந்தது. திருப்பத்தூர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம், காந்தி வீதி, நேரு பஜார் வழியாக அரண்மனைவாசல் சண்முகராஜா கலையரங்கம் வந்தடைந்தது. அங்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் கேஆர்.ராமசாமி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் ராமஅருணகிரி, ராஜசேகரன், சுந்தரம், குணசேகரன், திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், நகர செயலாளர் துரைஆனந்த், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சிபிஎம் மாவட்ட நிர்வாகி கந்தசாமி, சிபிஐ நகர் செயலாளர் ராஜேஸ், மதிமுக மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் சங்குஉதயக்குமார், திருமொழி, திக மாவட்ட நிர்வாகி இன்பலாதன் மற்றும் பாஜ, மமக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.