திருக்கோவிலூர், ஆக. 14: திருக்கோவிலூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய 17 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருக்கோவிலூர் பகுதியில் தென்பெண்ணையாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி மகேஷ் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மணலூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (23), ராஜீவ்காந்தி (30), சக்திவேல் (30), ஏகாம்பரம் (30), விக்னேஷ் (23) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து 5 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.