இடைப்பாடி, ஆக.13:திமுக தலைவர் கருணாநிதி மறைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்த 6 தொண்டர்களின் குடும்பதினருக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆறுதல் கூறினார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 7ம் தேதி காலமானார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில், இடைப்பாடி தாவாந்தெரு வீரப்பன், இடைப்பாடி ஒன்றியம் மசையன் தெரு மணி, சித்தூர் துரைசாமி, பூலாம்பட்டி வெங்கடாஜலபதி, கொங்கணாபுரம் ஒன்றியம் கட்சிப்பள்ளி லட்சுமணன், ராஜா (எ) வெள்ளக்குட்டி ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தாருக்கு, சேலம் மேற்கு தொகுதி திமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் நேரில் சென்று ஆறுதல் கூறி, படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.