விழுப்புரம், ஆக. 13: விழுப்புரம் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஏட்டு மற்றும் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் அருகே வளவனூர் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் தேவநாதன். சமீபகாலமாக வளவனூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. எஸ்பியின் அதிரடி நடவடிக்கையால் தொடர்ந்து திருட்டு மணல் லாரிகள் பிடிக்கப்பட்டு, மணல் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மணல் கடத்தலுக்கு சில போலீசாரே உடந்தையாக இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி அவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் வளவனூர் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிவரும் தேவநாதன் என்பவர் மணல்கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.