மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

வானூர், ஆக. 13: வானூர் தாலுகா திருவக்கரையில் உள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மணல் கடத்துவதாக வானூர் தாசில்தாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தாசில்தார் ஜோதிவேல் மற்றும் வருவாய்த்துறையினர் திருவக்கரை மற்றும் பொம்பூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆற்று மணல் ஏற்றிவந்த 7 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேல் நடவடிக்கைக்காக விழுப்புரம் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Related Stories: