காரைக்கால், ஆக.13: கோயில் சிலைகள், நகைகள் கொள்ளைப்போவதை தடுக்கும் பொருட்டு, மாவட்ட இந்து முன்னணி சார்பில், கோயில் உண்டியல்களில் மனு போடும் போராட்டம் நேற்று தொடங்கியது. கோயில் சிலைகள், நகைகள், குளங்கள் மற்றும் பிற பொருட்கள் கொள்ளைப்போவதை தடுக்கவும், நம் சாமி, நம் கோயில், இதை நாம்தான் காக்க வேண்டும். கோயிலை நாம் காத்தால், நம்மை கடவுள் காப்பார் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள இந்து கோயில்களில் இந்துக்கள் குடும்பத்தோடு சென்று உண்டியலில் மனு சமர்ப்பிக்கும் போராட்டம் நேற்று தொடங்கப்பட்டது. காரைக்கால் அம்மையார் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நூதன போராட்டத்திற்கு, மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன் தலைமை வகித்தார்.