பழநி, ஆக. 13: குற்ற சம்பவங்களை தடுக்க பழநி நகரில் காவல்துறையினர் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் நகரான பழநிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நகரில் கடந்த சில மாதங்களாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பது, வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடுவது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். எனினும், கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு மற்றும் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.இதனை தடுக்க நகர் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.