மாநில தடகள போட்டிக்கு குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு

தென்காசி, ஆக. 13:  மாநில தடகள போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.நெல்லை  மாவட்ட அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டி பாளை அண்ணா  விளையாட்டரங்கில் நடந்தது. இதில் 14  வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை  ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெங்கடேஷ்குமார் முதலிடம்  பெற்றார். மேலும் இப்பள்ளி மாணவி ஸ்ருதிகா 2ம் இடமும், 100 மீட்டர்  ஓட்டத்தில் இப்பள்ளி மாணவர் முகமது மீரான் 3ம் இடமும் வென்றனர்.  இதன் மூலம்  மாநில தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சாதனை படைத்த இவர்களை பள்ளி முதல்வர் திருமலை,  தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை  சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் பாராட்டினர்.

Related Stories: